தமிழகத்தில் 5 காவல்துறை உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை த்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையர் ஐ.ஈஸ்வர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | நாடு முழுவதும் என்ஆர்சி? மக்களவையில் அரசு விளக்கம்
சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ்.ஆறுமுகசாமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரை போக்குவரத்து துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த என்.மணிவண்ணன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.விஜயகுமார் சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.அரவிந்தன் செங்கல்பட்டு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.