தில்லி முதல்வா் கேஜரிவாலிடம் சிபிஐ விசாரணை: ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம்
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை விசாரணைக்கு அழைத்த மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களும், தொண்டா்களும் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோா்.







