தெலங்கானாவில் தெருநாய் தாக்கியதில் 4 வயது சிறுவன் கண்ணை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், புவனகிரி நகரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே அந்த சிறுவன் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருநாய் தாக்கியதில் சிறுவனின் ஒரு கண் கருவிழி பெயர்ந்து தரையில் விழுந்தது.
உடனே அச்சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாகவும், அவனது மற்றொரு கண் பாதிக்கப்படவில்லை என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. கிரண் குமார் ரெட்டி உத்தரவிட்டார்.
சிறுவனின் தந்தையிடமும் பேசி, சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்று உறுதியளித்தார். சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறான் என்று கிரண் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.
Summary
In a shocking incident, a four-year-old boy lost his eye after a stray dog attacked him in Yadadri Bhuvanagiri district of Telangana, police said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து!

ம.பி.யில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்!

தெலங்கானா: சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 3,700 எல்பிஜி சிலிண்டர்கள் பறிமுதல்

கணவா் எரிவாயு சிலிண்டரால் தாக்கியதில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



