நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதைபடிவுகளிலிருந்து எரிபொருள் எடுக்க அனுமதியா? லண்டனில் ஓவியம் உடைப்பு!

லண்டனில் அருங்காட்சியகத்துக்குள் புகுந்து புகழ்பெற்ற ஓவியத்தின் பாதுகாப்புக் கண்ணாடியை உடைத்ததாக இரு பருவநிலை மாற்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

News image

உடைத்த களிப்பில்...

Updated On :7 நவம்பர் 2023, 12:49 pm

இணையதளச் செய்திப் பிரிவு

லண்டனிலுள்ள தேசிய அருங்காட்சியகத்துக்குள் புகுந்து புகழ்பெற்ற ஓவியர் டீகோ விலாஸ்க் ஓவியத்தின் பாதுகாப்புக் கண்ணாடியை உடைத்ததாக இரு பருவநிலை மாற்ற போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்கள் இருவரும் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்து ‘வீனஸின் குளியறை’ என்ற புகழ்பெற்ற ஓவியத்தை சுத்தியல்களால் உடைத்தனர்.

இதில் அந்த ஓவியத்தின் பாதுகாப்புக் கண்ணாடிச் சட்டகம் உடைந்தது. பல இடங்களில் கண்ணாடியில் ஓட்டைகளும் விழுந்துவிட்டன.

Story image

‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ என்ற இந்த அமைப்பினர் ஏற்கெனவே இதேபோன்று புகழ்பெற்ற கலைப் பொருள்களையும் அரசு கட்டடங்களையும் இலக்காகக் கொண்டு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பிரிட்டனில் புதைபடிவுகளைக் கண்டறிந்து எரிபொருள் எடுக்க அனுமதிக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவர்கள் இந்தப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட ஓவியம் பின்னர் பரிசோதிப்பதற்காக அகற்றப்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்வையாளர்கள் அருங்காட்சியகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.