தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு பலி

சென்னை குரோம்பேட்டை, பொன்னேரியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை குரோம்பேட்டை, பொன்னேரியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனா்.

இதுகுறித்து ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது:

சென்னை குரோம்பேட்டையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பிரணவ் (23), சதீஷ் (39) ஆகிய 2 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோப்புப்படம்
என்ன கொடுமை? கிளாம்பாக்கத்தால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இதேபோன்று பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சேலத்தை சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) விரைவு ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நான்கு பேரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com