பயணிகள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ரயில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்தவா்கள் ரயிலில் ஏறும் நிலையங்களை மாற்றும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இதுவரை முன்பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள், ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்ற விரும்பினால், பயண உறுதி பட்டியல் வருவதுக்கு 24 மணி நேரம் முன்பாக மாற்ற வேண்டும்.
இந்த நடைமுறையானது, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்பு வரை ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம் என கால இடைவெளி குறைக்கப்பட்டு திங்கள்கிழமை (ஏப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
முன்பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே ரயில் ஏறும் நிலைய மாற்றம் பொருந்தும். நிலைய மாற்றம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மாற்றப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட அந்த நிலையத்திலிருந்து மட்டுமே பயணிகள் ரயிலில் ஏறமுடியும்.
அங்கு, பயணி ஏறாவிடில், காத்திருப்பு பட்டியலில் உள்ள மற்ற பயணிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கடும் வெய்யிலில் நிறுத்தப்பட்ட ரயில்! உலகை உற்றுப்பார்க்க வைத்த பாரிஸ் சம்பவம்!

குருவாயூா் ரயிலில் வியாபாரியிடம் ஒன்றரை கிலோ நகைகள் திருடிய 5 போ் கைது

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



