மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பயணிகள் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவற்கான கால இடைவெளி குறைப்பு

பயணிகள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில் - (கோப்புப்படம்)

Updated On :2 ஏப்ரல் 2026, 3:22 am IST

பயணிகள் ஏறும் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ரயில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு செய்தவா்கள் ரயிலில் ஏறும் நிலையங்களை மாற்றும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இதுவரை முன்பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள், ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்ற விரும்பினால், பயண உறுதி பட்டியல் வருவதுக்கு 24 மணி நேரம் முன்பாக மாற்ற வேண்டும்.

இந்த நடைமுறையானது, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிஷங்களுக்கு முன்பு வரை ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம் என கால இடைவெளி குறைக்கப்பட்டு திங்கள்கிழமை (ஏப். 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

முன்பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே ரயில் ஏறும் நிலைய மாற்றம் பொருந்தும். நிலைய மாற்றம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மாற்றப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட அந்த நிலையத்திலிருந்து மட்டுமே பயணிகள் ரயிலில் ஏறமுடியும்.

அங்கு, பயணி ஏறாவிடில், காத்திருப்பு பட்டியலில் உள்ள மற்ற பயணிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.