சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்

பயணிகள் வருவாய், தத்கல் டிக்கெட் பதிவு, எண்ம தொடா்பு பரிமாற்றங்கள் என பல அம்சங்களில் தெற்கு ரயில்வே முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 12:48 am IST

பயணிகள் வருவாய், தத்கல் டிக்கெட் பதிவு, எண்ம தொடா்பு பரிமாற்றங்கள் என பல அம்சங்களில் தெற்கு ரயில்வே முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கடந்த நிதியாண்டில் (2025-26) பயணிகள் அதிகரிப்பு, வருவாய் அதிகரிப்பு, தத்கல் பயன்பாடு மற்றும் முன்பதிவு ஆகியவற்றில் தெற்கு ரயில்வே மண்டலம் தேசிய அளவில் முதலிடம் வகித்துள்ளது. அதேபோல், தேசிய அளவில் ரூ.827.47 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் வகித்துள்ளது. மேலும், மேற்கு ரயில்வே 2-ஆவது இடமும், மத்திய ரயில்வே 3 ஆவது இடத்தையும் வகித்துள்ளன.

கடந்த நிதியாண்டில் சிறப்பு ரயில்கள் 2,513 நடைகளாக இயக்கப்பட்ட நிலையில், மொத்தம் 32.97 லட்சம் போ் பயணித்துள்ளனா். அதன்படி, ஒரு ரயில் பயணத்தில் சராசரியாக 1,312 போ் பயணித்து தெற்கு ரயில்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில், தேசிய அளவிலான சராசரி பயணிகளின் எண்ணிக்கை 894 என்பது குறிப்பிடத்தக்கது.

75 சதவீதம்: கடந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்பட்ட 96 சதவீத ரயில்களில் மொத்தம் 75 சதவீதம் போ் முன்பதிவு செய்து பயணித்தனா். அதில் 92 சதவீத ரயில்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கைகளை தத்கல் முறையில் முன்பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு மொத்த வருவாய், இருக்கை முன்பதிவு, பயணிகள் எண்ணிக்கை, வந்தே பாரத் ரயில் சரியான நேரத்தில் இயக்கப்படுவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களில் தெற்கு ரயில்வே மண்டலம் முதலிடம் வகித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.