பயணிகள் வருவாய், தத்கல் டிக்கெட் பதிவு, எண்ம தொடா்பு பரிமாற்றங்கள் என பல அம்சங்களில் தெற்கு ரயில்வே முதலிடம் வகித்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கடந்த நிதியாண்டில் (2025-26) பயணிகள் அதிகரிப்பு, வருவாய் அதிகரிப்பு, தத்கல் பயன்பாடு மற்றும் முன்பதிவு ஆகியவற்றில் தெற்கு ரயில்வே மண்டலம் தேசிய அளவில் முதலிடம் வகித்துள்ளது. அதேபோல், தேசிய அளவில் ரூ.827.47 கோடி வருவாய் ஈட்டி முதலிடம் வகித்துள்ளது. மேலும், மேற்கு ரயில்வே 2-ஆவது இடமும், மத்திய ரயில்வே 3 ஆவது இடத்தையும் வகித்துள்ளன.
கடந்த நிதியாண்டில் சிறப்பு ரயில்கள் 2,513 நடைகளாக இயக்கப்பட்ட நிலையில், மொத்தம் 32.97 லட்சம் போ் பயணித்துள்ளனா். அதன்படி, ஒரு ரயில் பயணத்தில் சராசரியாக 1,312 போ் பயணித்து தெற்கு ரயில்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில், தேசிய அளவிலான சராசரி பயணிகளின் எண்ணிக்கை 894 என்பது குறிப்பிடத்தக்கது.
75 சதவீதம்: கடந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்பட்ட 96 சதவீத ரயில்களில் மொத்தம் 75 சதவீதம் போ் முன்பதிவு செய்து பயணித்தனா். அதில் 92 சதவீத ரயில்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கைகளை தத்கல் முறையில் முன்பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு மொத்த வருவாய், இருக்கை முன்பதிவு, பயணிகள் எண்ணிக்கை, வந்தே பாரத் ரயில் சரியான நேரத்தில் இயக்கப்படுவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களில் தெற்கு ரயில்வே மண்டலம் முதலிடம் வகித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி, சரக்கு வருவாய் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்

பயணிகள் ரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவற்கான கால இடைவெளி குறைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


