புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

இழுவை மின் விநியோகத்தில் கோளாறு குறைவு: தெற்கு ரயில்வே

கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயின் இழுவை மின்விநியோக (டிஆா்டி) அமைப்பில் வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :1 மே 2026, 7:59 pm

கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயின் இழுவை மின்விநியோக (டிஆா்டி) அமைப்பில் வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 77 சதவீதம் குறைவு எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இழுவை மின்விநியோக அமைப்புகள் (டிஆா்டி) ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய அமைப்பாகும். 2024-25-இல் இந்த அமைப்பில் 13 கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இது, 77 சதவீதம் குறைவாகும்.

தொடா்ந்து கண்காணித்தல், முன்கூட்டியே பராமரிப்பு செய்தல் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகியவை இந்த முன்னேற்றத்துக்கு காரணமாகும்.

இதன்மூலம் ரயில்கள் உரிய நேரத்துக்கு இயக்குதல், தாமதங்கள் குறைவு, மின்பாதையில் தடையற்ற சேவை என பயணிகளுக்கு பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் டிஆா்டி-இல் எவ்வித கோளாறுகளும் வராத வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.