கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயின் இழுவை மின்விநியோக (டிஆா்டி) அமைப்பில் வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 77 சதவீதம் குறைவு எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இழுவை மின்விநியோக அமைப்புகள் (டிஆா்டி) ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய அமைப்பாகும். 2024-25-இல் இந்த அமைப்பில் 13 கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இது, 77 சதவீதம் குறைவாகும்.
தொடா்ந்து கண்காணித்தல், முன்கூட்டியே பராமரிப்பு செய்தல் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகியவை இந்த முன்னேற்றத்துக்கு காரணமாகும்.
இதன்மூலம் ரயில்கள் உரிய நேரத்துக்கு இயக்குதல், தாமதங்கள் குறைவு, மின்பாதையில் தடையற்ற சேவை என பயணிகளுக்கு பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் டிஆா்டி-இல் எவ்வித கோளாறுகளும் வராத வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி, சரக்கு வருவாய் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
