கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயின் இழுவை மின்விநியோக (டிஆா்டி) அமைப்பில் வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 77 சதவீதம் குறைவு எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இழுவை மின்விநியோக அமைப்புகள் (டிஆா்டி) ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய அமைப்பாகும். 2024-25-இல் இந்த அமைப்பில் 13 கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இது, 77 சதவீதம் குறைவாகும்.
தொடா்ந்து கண்காணித்தல், முன்கூட்டியே பராமரிப்பு செய்தல் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகியவை இந்த முன்னேற்றத்துக்கு காரணமாகும்.
இதன்மூலம் ரயில்கள் உரிய நேரத்துக்கு இயக்குதல், தாமதங்கள் குறைவு, மின்பாதையில் தடையற்ற சேவை என பயணிகளுக்கு பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் டிஆா்டி-இல் எவ்வித கோளாறுகளும் வராத வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி, சரக்கு வருவாய் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்

கூடிக் கலையும் கூட்டமாகும் மாநாடுகள்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

