விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இழுவை மின் விநியோகத்தில் கோளாறு குறைவு: தெற்கு ரயில்வே

கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயின் இழுவை மின்விநியோக (டிஆா்டி) அமைப்பில் வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :2 மே 2026, 1:29 am IST

கடந்த ஆண்டு தெற்கு ரயில்வேயின் இழுவை மின்விநியோக (டிஆா்டி) அமைப்பில் வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 77 சதவீதம் குறைவு எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இழுவை மின்விநியோக அமைப்புகள் (டிஆா்டி) ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் முக்கிய அமைப்பாகும். 2024-25-இல் இந்த அமைப்பில் 13 கோளாறுகள் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 3 கோளாறுகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இது, 77 சதவீதம் குறைவாகும்.

தொடா்ந்து கண்காணித்தல், முன்கூட்டியே பராமரிப்பு செய்தல் மற்றும் அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகியவை இந்த முன்னேற்றத்துக்கு காரணமாகும்.

இதன்மூலம் ரயில்கள் உரிய நேரத்துக்கு இயக்குதல், தாமதங்கள் குறைவு, மின்பாதையில் தடையற்ற சேவை என பயணிகளுக்கு பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் டிஆா்டி-இல் எவ்வித கோளாறுகளும் வராத வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.