கோவை: கோவை மாவட்டம், தீத்திபாளையம் அடுத்த கரடிமடை பகுதியில் வெள்ளிக்கிழமை குட்டியுடன் விளைநிலங்களுக்குள் 5-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தது.
விளைநிலங்களில் புகுந்த யானைகளை டிராக்டர் உதவியுடன் அந்த பகுதி விவசாயிகள் விரட்டி வருகின்றனர்.
கடந்த 5 நாள்களாக இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதாகவும், வனத்துறையினருக்கு போதுமான ஜீப் உள்ளிட்ட வாகன வசதி இல்லாததாலும் யானைகளை வனத்திற்குள் விரட்டுவதில் சிக்கல் நீடிப்பதாக குற்றசாட்டியுள்ள அந்த பகுதி விவசாயிகள், அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.