அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர்கள் நியமன முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம் - DIN

Updated On :10 ஆகஸ்ட் 2024, 1:53 pm IST

பேராசிரியர்கள் நியமன முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கடந்த 2018ல் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க ஒரு அமைக்கப்படும் என்று பல்கலைக்கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் குழு அமைக்க தாமதித்ததால், சையது ரஹமத்துல்லா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்றை 2019ல் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் உடனடியாக விசாரணை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இன்றைய விசாரணையில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில், பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விண்ணப்பதாரர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என சென்னை பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.