துங்கபத்ரா அணையின் 19வது மதகு உடைப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் 19 ஆவது மதகு உடைந்ததால் கோப்பால், விஜயநகரா, பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துங்கபத்ரா அணையின் 19வது மதகு உடைந்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.









