சென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரெளடி ரோஹித் ராஜனை காவல் துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
முன்னதாக, தேனியில் கைது செய்யப்பட்ட ரோஹித் ராஜனை, காவல் துறையினர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் தனிப்படை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், ரோஹித் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்க காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, காவலர்கள் இருவரை ரெளடி ரோஹித் அரிவாளால் தாக்கி தப்பியோட முயற்சி செய்துள்ளார். தற்காப்புக்காக, ரோஹித்தை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ரோஹித் ராஜன் காயம் அடைந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோஹித் தாக்கிய இரு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரெளடி ரோஹித் ராஜன் மீது மயிலாப்பூர் சிவகுமார் கொலை வழக்கு உள்பட 13 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துப்பாக்கியுடன் நீரஜ் பவானா ரெளடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!
காக்கிச் சட்டைகளின் கருணை...

ஆகாஷ் உயிரிழந்த விவகாரம்: காவல் துறையினர் 11 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



