
சிதம்பரம்: நாட்டின் 78-வது சுதந்திரநாள் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் 78-ஆவது சுதந்திர நாளையொட்டி பொதுதீட்சிதர்கள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர்.
பின்னர் மேளதாளத்துடன் கோயில் செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் தேசியக்கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தில் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.