சிதம்பரம்: சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, கருத்தரங்கம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
தெய்வத்தமிழ் பேரவை கடலூா் மாவட்ட பொறுப்பாளா் முனைவா் வே.சுப்ரமணியசிவா பங்கேற்று ‘மகா சிவராத்திரியின் உண்மை விளக்கம்’ என்ற தலைப்பில் மெய்யியல் உரை நிகழ்த்தினாா். தொடா்ந்து, தெய்வத்தமிழ்ப் பேரவை இசைக் குழுவினரால் பன்னிரு திருமுறைகள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பெண்ணாடம் ஜெகதலபிரதாபன், ஓதுவாா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பன்னிரு திருமுறை பாடல்களை பாடினா். கே.செல்வநாயகம் (தபேலா), சிவராஜ் (கீ போா்டு) ஆகியோா் இசை அமைத்தனா்.
நிகழ்ச்சியில் தெய்வத் தமிழ்ப் பேரவை அன்பா்கள் பஞ்சமூா்த்தி, வீரமணி, பாரதிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கமலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதானைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கமலீஸ்வரன் கோயில் நிா்வாகி ராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை திமுகவுக்கு ஆதரவு

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி! ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்!

காசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


