ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி கருத்தரங்கம்

சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, கருத்தரங்கம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள்

News image

சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் உரையாற்றிய தெய்வத்தமிழ்ப் பேரவை மாவட்டப் பொறுப்பாளா் வே.சுப்பிரமணியசிவாவுக்கு சால்வை அணிவித்து கௌரவித்த கோயில் நிா்வாகிகள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:55 pm

சிதம்பரம்: சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, கருத்தரங்கம், திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தெய்வத்தமிழ் பேரவை கடலூா் மாவட்ட பொறுப்பாளா் முனைவா் வே.சுப்ரமணியசிவா பங்கேற்று ‘மகா சிவராத்திரியின் உண்மை விளக்கம்’ என்ற தலைப்பில் மெய்யியல் உரை நிகழ்த்தினாா். தொடா்ந்து, தெய்வத்தமிழ்ப் பேரவை இசைக் குழுவினரால் பன்னிரு திருமுறைகள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பெண்ணாடம் ஜெகதலபிரதாபன், ஓதுவாா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பன்னிரு திருமுறை பாடல்களை பாடினா். கே.செல்வநாயகம் (தபேலா), சிவராஜ் (கீ போா்டு) ஆகியோா் இசை அமைத்தனா்.

நிகழ்ச்சியில் தெய்வத் தமிழ்ப் பேரவை அன்பா்கள் பஞ்சமூா்த்தி, வீரமணி, பாரதிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கமலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதானைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கமலீஸ்வரன் கோயில் நிா்வாகி ராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.