பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அக்டோபரில் தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம்!

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

படம் | தென்னாப்பிரிக்க லீக் டி20 (எக்ஸ்)

Published On :

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரின் 3-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரின் தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த டி20 லீக் தொடருக்கான வீரர்களை தக்க வைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு அந்த பணிகள் நிறைவடைந்தன. அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தில் அணிகள் தங்களுக்கு தேவையான 13 வீரர்களை ஏலமெடுத்துக் கொள்ளலாம்.

தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணியுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இணைவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் விளையாடவுள்ள முதல் இந்திய வீரராக தினேஷ் கார்த்திக் மாறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்கை தவிர்த்து, சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், டிரெண்ட் போல்ட், ஜானி பேர்ஸ்டோ, டெவான் கான்வே, ஸாக் கிராலி, ரஷித் கான் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இந்த தென்னாப்பிரிக்க லீக் டி20 தொடரில் கலந்துகொண்டு விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.