பள்ளிகள் அனுமதியின்றி முகாம்கள் நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) முகாமின் போது எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைகுள்ளாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பள்ளித் தாளாளா், முதல்வா் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசி முகாம் எதுவும் நடத்தப்படவில்லை என தமிழ்நாடு - புதுச்சேரி வட்ட என்சிசி இயக்குநரகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு முகாமும் நடத்தக் கூடாது. முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் முகாம்கள் நடத்த அனுமதியில்லை. தனியார் பள்ளிகளில் எவ்வித முகாம்கள் நடத்தினாலும் பெற்றோர்களின் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெறாமல் முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடகத்துடன் தமிழக முதல்வா் பேச்சு நடத்தக் கூடாது: அன்புமணி

கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் பயன்படுத்தக் கூடாது
மேலும் சிறக்க வேண்டும் அரசுப் பள்ளிகள்!

பள்ளிகளில் என்னென்ன நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது? வழிகாட்டுதல்கள் வெளியீடு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



