கிருஷ்ணகிரியில் 17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க கோரிக்கை

தனியாா் பள்ளியில் 17 மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரியில் 17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க கோரிக்கை
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியாா் பள்ளியில் 17 மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என வழக்குரைஞர் சூரிய பிரகாசம் கோரிக்கை வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மாணவிகளுக்கு கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையில் தேசிய மாணவா் படை (என்.சி.சி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், அந்தப் பள்ளியில் பயிலும் 17 மாணவிகள் பங்கேற்றனா். இம் முகாமில் பங்கேற்ற மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கு கட்டடத்தில் தங்கி பயிற்சியில் பங்கேற்றனா். இந்த மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவராமன் (30) என்பவா் தலைமையிலான குழுவினா் பயிற்சி அளித்தனா். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற எட்டாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவியை சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை 3 மணி அளவில், என்.சி.சி. பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவராமன் (30) என்பவா் மாணவியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் 17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க கோரிக்கை
தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்: நல்வாய்ப்பாக 27 பேர் உயிர்த்தப்பினர்

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி முதல்வா் சதீஷ்குமாரிடம் புகாா் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து, யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளாா்.

இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, பள்ளி முகாமில் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் மாணவி தெரிவித்துள்ளாா். அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தாய், தனது மகளை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் பயிற்சியாளா் சிவராமன், பள்ளி முதல்வா் சதீஷ்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்தச் சம்பவம் குறித்து, சேலம் சரக டி.ஐ.ஜி. உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து பயிற்சியாளா் சிவராமன், பள்ளியின் தாளாளா், முதல்வா், ஆசிரியா்கள் உள்பட 11 பேரை கைது செய்தனா்.

இந்த குற்றச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். மேலும், நேரில் விசாரணை மேற்கொண்டு உரிய பரிந்துரைகளை அளிக்க சமூக நலத் துறை செயலாளா் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழுவும் அமைத்தாா்.இந்தக் குழுவினா் 60 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், சிவராமன் போலீஸாரின் காவலில் இருந்து தப்ப முயன்ற போது, வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த ஜூலை 11-ஆம் தேதி, அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், சிவராமன் விஷத் தன்மை கொண்ட எலி பசையை உள்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததை அடுத்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா்சிகிச்சை பெற்று வந்த சிவராமன்,சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரியில் 17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மரணம்! விபத்தில் தந்தையும் பலி!

இந்த நிலையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதில் மன வேதனையில் இருந்துவந்த சிவராமனின் தந்தை அசோக் குமார் (61), காவேரிபட்டிணம் , நடேசன் திருமண மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தனியாா் பள்ளியில் 17 மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என வழக்குரைஞர் சூரிய பிரகாசம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,தனியாா் பள்ளியில் 17 மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து முறையாக மனு தாக்கல் செய்தால் விசாரிக்கப்பட்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஒப்பதல் வழங்கியுள்ளது.

இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com