ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாகச் சரிந்துள்ளதால், 39 நாள்களுக்கு பின் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
Published on
Updated on
1 min read

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாகச் சரிந்துள்ளதால், 39 நாள்களுக்கு பின் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக மாநிலங்களில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடுவது குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக நீா்வரத்து சரிந்தது.

ஒகேனக்கல் பிரதான அருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரௌடி திருவேங்கடம் கைது!

இதையடுத்து ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் திரும்பப் பெற்று, 39 நாள்களுக்கு பின்னர் குளிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்பாக குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com