போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும்: சீமான்

எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்றெல்லாம் அண்ணாமலை பேசக் கூடாது.

News image

சீமான் (கோப்புப்படம்) - எக்ஸ்

Updated On :26 ஆகஸ்ட் 2024, 1:54 pm IST

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் குறித்து ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், திமுகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்று அரசியல் தலைவர்கள் பலரும் விமரிசித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

முதல்வர் வெளிநாடு செல்வதால் அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும். ரஜினிகாந்த் மற்றும் துரைமுருகன் பேசியது நகைச்சுவைக்காகத்தான்.

எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்றெல்லாம் அண்ணாமலை பேசக் கூடாது. தற்போது இருப்பவர்களில் பழனிசாமிதான் புத்திசாலி. தமிழர்களான தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்காமல், தமிழரல்லாத எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை பாஜக வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.