ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நடுக்கடலில் மூழ்கிய படகு! மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை!

குஜராத்தில் நடுக்கடலில் மூழ்கத்துவங்கிய படகிலிருந்து 7 மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதைப் பற்றி..

News image
கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2024, 3:50 pm

DIN

குஜராத்: போர்பந்தரில் நடுக்கடலில் மூழ்கத்துவங்கிய படகிலிருந்து 7 மீனவர்களை கடலோரப் காவல்படையினரின் நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (டிச.13) போர்பந்தர் கடற்பகுதியில் கரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் நடுக்கடலில் “ஓம் ஸ்ரீ” எனப் பெயரிடப்பட்ட மீனவப் படகு ஒன்று மூழ்கத்துவங்கியுள்ளது.

இதுகுறித்து, வந்த அவசர அழைப்பினைத் தொடர்ந்து கடலோர காவல் படையினருக்கு சொந்தமான C-161 எனும் கப்பல் மற்றும் கண்கேஷ்வரி எனும் மீனவப் படகும் சென்று நடுக்கடலில் தவித்த 7 மீனவர்களையும் மீட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடுக்கடலில் சிக்கித்தவித்த 7 மீனவர்களில் 5 பேர் கண்கேஷ்வரி மீனவப் படகின் மூலமாகவும், 2 பேர் C-161 கப்பலின் மூலமாகவும் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் மங்குரோல் கடற்கரையில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.