வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

நடுக்கடலில் மூழ்கிய படகு! மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை!

குஜராத்தில் நடுக்கடலில் மூழ்கத்துவங்கிய படகிலிருந்து 7 மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதைப் பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :13 டிசம்பர் 2024, 9:20 pm IST

குஜராத்: போர்பந்தரில் நடுக்கடலில் மூழ்கத்துவங்கிய படகிலிருந்து 7 மீனவர்களை கடலோரப் காவல்படையினரின் நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (டிச.13) போர்பந்தர் கடற்பகுதியில் கரையிலிருந்து 40 கி.மீ தொலைவில் நடுக்கடலில் “ஓம் ஸ்ரீ” எனப் பெயரிடப்பட்ட மீனவப் படகு ஒன்று மூழ்கத்துவங்கியுள்ளது.

இதுகுறித்து, வந்த அவசர அழைப்பினைத் தொடர்ந்து கடலோர காவல் படையினருக்கு சொந்தமான C-161 எனும் கப்பல் மற்றும் கண்கேஷ்வரி எனும் மீனவப் படகும் சென்று நடுக்கடலில் தவித்த 7 மீனவர்களையும் மீட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடுக்கடலில் சிக்கித்தவித்த 7 மீனவர்களில் 5 பேர் கண்கேஷ்வரி மீனவப் படகின் மூலமாகவும், 2 பேர் C-161 கப்பலின் மூலமாகவும் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் மங்குரோல் கடற்கரையில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.