பாகிஸ்தான் கடலோரக் காவல் படையின் முகாமில் நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் வெடிகுண்டு தாக்குதலில் 30 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தானின் குவாடர் மாவட்டத்தில் அமைந்திருந்த பாகிஸ்தான் கடலோரக் காவல் படையின் முகாமினுள் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) மாலை வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓட்டி வந்து வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், உயிர்பிழைத்த வீரர்களின் மீது பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தச் சம்பவத்தில், இதுவரை 30-க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலுக்கு பலூசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த பலூசிஸ்தான் விடுதலைப் படை எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், அந்த அமைப்பு இந்தத் தாக்குதல் பதிவான 43 நொடி விடியோவையும் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பலூசிஸ்தான் சுதந்திரம் பெறும் வரையில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான தங்களின் தாக்குதல்கள் தொடரும் என பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Summary
It has been reported that 30 soldiers were killed in a suicide bombing attack on a Pakistan Coast Guard camp.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹாலண்ட் அசத்தல்! பிஃபா வரலாற்றின் நாக்-அவுட் சுற்றில் நார்வேவுக்கு முதல் வெற்றி!

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய ஏழு பேர் தில்லியில் கைது: ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டு







