27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பூமியை நோக்கி வரும் 2 சிறுகோள்கள்: நாசா எச்சரிக்கை!

பூமியை நோக்கி இரண்டு சிறுகோள்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :15 டிசம்பர் 2024, 2:18 pm IST

பூமியை நோக்கி இரண்டு பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இரண்டு பெரிய சிறுகோள்கள் பூமியை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருப்பதாகவும் அவை நாளை அதிகாலை பூமியை கடந்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. இவை இரண்டினாலும் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும் அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆஸ்டிராய்டுகளில் மிகப்பெரியதிற்கு ’ஆஸ்டிராய்டு 2024 XY5’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் அது 71 அடி சுற்றளவில் சிறிய ரக விமானத்தின் அளவில் இருக்கக்கூடும் எனவும் ஒரு மணி நேரத்திற்கு 17,389 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அது இந்திய மணிக்கணக்கில் நாளை (டிச.16) காலை 5.56 மணியளவில், பூமியிலிருந்து சுமார் 3,500,000 கி.மீ. தொலைவில் அது கடந்து செல்லக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளுக்கும் பூமிக்குமான தொலைவானது நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 9 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைவிட சற்று சிறிய மற்றொரு சிறுகோளான ’ஆஸ்டிராய்டு XB6’ 56அடி சுற்றளவில் சிறிய வீடு அளவில் இருக்கும் எனவும் இது மணிக்கு 23,787 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருவதாகவும் இந்திய மணிக்கணக்கில் நாளை காலை 7.25 மணியளவில் பூமியிலிருந்து 6,690,000 கி.மீ. தொலைவில் இது கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 17.4 மடங்கு அதிக தொலைவில் பயணிப்பதால் இதனாலும் பூமிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக 150 மீட்டருக்கும் மேல் 4.6 மில்லியன் கி.மீ தொலைவில் பூமியை நோக்கி வரும் சிறுகோள்கள் மட்டுமே அபாயகரமானதாக கருதப்படும். இருப்பினும், முன்னெச்சரிக்கையோடு இருப்பதற்காக செயற்கைக் கோள்கள் மற்றும் ரேடார்கள் உதவியோடு சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் பூமிக்கு அருகில் வரும் அனைத்து கோள்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.