பூமியை நோக்கி இரண்டு பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இரண்டு பெரிய சிறுகோள்கள் பூமியை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருப்பதாகவும் அவை நாளை அதிகாலை பூமியை கடந்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. இவை இரண்டினாலும் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும் அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆஸ்டிராய்டுகளில் மிகப்பெரியதிற்கு ’ஆஸ்டிராய்டு 2024 XY5’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் அது 71 அடி சுற்றளவில் சிறிய ரக விமானத்தின் அளவில் இருக்கக்கூடும் எனவும் ஒரு மணி நேரத்திற்கு 17,389 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அது இந்திய மணிக்கணக்கில் நாளை (டிச.16) காலை 5.56 மணியளவில், பூமியிலிருந்து சுமார் 3,500,000 கி.மீ. தொலைவில் அது கடந்து செல்லக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளுக்கும் பூமிக்குமான தொலைவானது நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 9 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: யுபிஐ மூலம் ரூ. 223 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் செய்து சாதனை!
அதைவிட சற்று சிறிய மற்றொரு சிறுகோளான ’ஆஸ்டிராய்டு XB6’ 56அடி சுற்றளவில் சிறிய வீடு அளவில் இருக்கும் எனவும் இது மணிக்கு 23,787 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருவதாகவும் இந்திய மணிக்கணக்கில் நாளை காலை 7.25 மணியளவில் பூமியிலிருந்து 6,690,000 கி.மீ. தொலைவில் இது கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 17.4 மடங்கு அதிக தொலைவில் பயணிப்பதால் இதனாலும் பூமிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக 150 மீட்டருக்கும் மேல் 4.6 மில்லியன் கி.மீ தொலைவில் பூமியை நோக்கி வரும் சிறுகோள்கள் மட்டுமே அபாயகரமானதாக கருதப்படும். இருப்பினும், முன்னெச்சரிக்கையோடு இருப்பதற்காக செயற்கைக் கோள்கள் மற்றும் ரேடார்கள் உதவியோடு சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் பூமிக்கு அருகில் வரும் அனைத்து கோள்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனில் மேனன் பயணம்!

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர்! 8 மாதங்கள் தங்குகிறார்!

தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! 90 கி.மீ. வேகத்தில் காற்று! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

பூமியை நோக்கி சூரிய துகள்கள்! தென்னிந்திய மாநிலங்கள் மீது விழுமா?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



