நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜவாதி, சிவசேனை (உத்தவ் பிரிவு) தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் பிரிவு) சிபிஎம், மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.
இதையும் படிக்க: மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்!
சமாஜவாதி எம்.பி. தர்மேந்திர யாதவ் மக்களவையில் பேசுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் அரசமைப்புக்கே எதிரானது. இந்த மசோதா அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கே எதிரானது. நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது” என்று பேசினார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மக்களவையில் பேசும்போது, ”ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தேர்தல் சீர்திருத்தம் அல்ல. ஒருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க முடியுமா?” என்று தெரிவித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல்

தீவிரமடையும் திரிணமூல் உள்கட்சி மோதல்! சின்னம், பெயருக்கு உரிமைகோரும் அதிருப்தி பிரிவு!

20 திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இணைவு: ஒரே நாளில் பெரும் கட்சியாக உருவெடுத்தது என்சிபிஐ







