நாடாளுமன்ற வளாகத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்!

பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர் மோடி.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், காங்கிரஸுக்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தினர்.

இதில், ராகுல் காந்தி தள்ளியதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பாஜக எம்பிக்கள் தன்னை வழிமறித்து மிரட்டியதாக ராகுல் காந்தியும், கீழே தள்ளியதில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

பிரதாப் சிங் சாரங்கி காயமுற்றது தொடர்பாக பாஜக எம்பி லட்சுமணன் கூறுகையில், ”ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நமது ஒடிஸா எம்.பி.க்கு காயம் ஏற்பட்டது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியும் அவமதித்து வருகிறது. நேருவால் அக்பேத்கர் காங்கிரஸில் இருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கருக்கு உரிய மரியாதையை வழங்கினார்” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com