பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்வி

ஈரான் மீதான தாக்குதல் பற்றி ராகுல் கூறுவது..

News image
ராகுல் காந்தி - பிரதமர் மோடி
Updated On :3 மார்ச் 2026, 10:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீதான அரதிரடித் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரான் மீதான ஒருதலைபட்ச தாக்குதல்களும், மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரின் கருத்துகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

உலகில் இந்தியாவின் அந்தஸ்தை மௌனம் குறைக்கிறது என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதங்கள் பலவீனமான பிராந்தியத்தைப் பரந்த மோதலுக்குத் தள்ளுவதாக அவர் கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.

பாதுகாப்பு கவலைகள் உண்மையானவை என்றாலும், இறையாண்மையை மீறும் தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.

ஈரான் மீதான ஒருதலைபட்ச தாக்குதல்களும், மற்ற மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும்.

வன்முறையைத் தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் கட்டுப்பாடும் மட்டுமே அமைதிக்கான ஒரே வழியாகும். இந்தியா தார்மீக ரீதியாகத் தெளிவாக இருக்க வேண்டும்.

சர்வதேச சட்டம் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகப் பேச நமக்குத் தைரியம் இருக்க வேண்டும்.

நமது வெளியுறவுக் கொள்கை இறையாண்மை மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் வேரூன்றியுள்ளது. அது நிலையானதாக இருக்க வேண்டும்.

இந்த வன்முறையை தீர்க்க பிரதமர் மோடி பேச வேண்டியது அவசியம்.மௌனம் காப்பது ஏன்? உலக ஒழுங்கை வரையறுக்க நாட்டின் தலைவரைப் படுகொலை செய்வதை அவர் ஆதரிக்கிறாரா? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

summary

Amid the US-Israel-Iran conflict, Congress leader Rahul Gandhi on Tuesday said Prime Minister Narendra Modi must speak up and answer as to whether he supports the assassination of a head of state as a way to define the world order.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.