காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புகோர வலியுறுத்தி ராகுல் காந்தி கூறியிருப்பது குறித்து...

News image

பிரதமர் மோடி | ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 6:05 pm IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புகோர வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஒரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வேதனையைப் பார்ப்பதைவிட வேதனை வேறு எதுவுமில்லை.

வினாத்தாள் கசிந்தது, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, பல வருட உழைப்பு ஒரே இரவில் அழிக்கப்பட்டது, நேர்மையற்ற அமைப்பில் நேர்மையுடன் இருக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், இன்னமும் மாணவர்களை மன்னிக்கும் தைரியம் பிரதமருக்கு இருக்கிறது.

வேதனையில் இருக்கும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் எதிர்காலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரைக்கூட அவர் சந்திக்கவில்லை.

மாணவர்களுக்கு அவரது மன்னிப்பு தேவையில்ல்லை. அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய மாணவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில்தான், பிரதமர் மோடிதான் மாணவர்களிடம் மன்னிப்புகோர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Summary

PM Modi should apologize to students, says LoP Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.