சக மாணவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

ஒடிசாவில் 14 வயது சிறுவன் ஒருவன் சக மாணவனை கத்தியால் குத்தியதைப் பற்றி..
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஒடிசா: கேந்திராப்பரா மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் சக மாணவனை 14 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான்.

பட்டாமுண்டை கிராம காவல் நிலையம் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இயங்கிவரும் தெலுங்காபசன்ட் நோடல் அரசுப் பள்ளியின் வகுப்பறையில் 14 வயதுடைய எட்டாம் வகுப்பு சிறுவன் ஒருவன் தன்னுடன் பயிலும் சக மாணவனை கத்தியால் குத்தியுள்ளான்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் கத்தியால் குத்திய சிறுவனை ஒடிசா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்திய ரத்தம் படிந்த கத்தியும் அவனிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில். அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சக மாணவனைத் தாக்கியதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராத நிலையில். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com