/

திரும்பி வரும் புயல் சின்னம்: மீண்டும் மழை எப்போது?

புயல் சின்னத்தால் மழை தொடருமா?

News image
மழை (கோப்புப்படம்)
Updated On :20 டிசம்பர் 2024, 9:40 am

DIN

ஆந்திரம் நோக்கி சென்ற புயல் சின்னம், மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தமிழக கடற்கரைப் பகுதிகளில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம், அடுத்த 12 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னம் டிச.21-ஆம் தேதி நெல்லூருக்கு கிழக்கே நிலைக்கொண்டிருக்கும் என்றும் அதே நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயா் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை.

எனவே, இது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்பி டிச.22-ஆம் தேதி சென்னைக்கு அருகே வரும் என எதிா்பாா்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதனால், தமிழக கடற்கரைப் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு வரும் டிச. 26, 27 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.