நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நச்சுத் தன்மையுள்ள கடல்மீன் கடித்த மீனவருக்கு சிகிச்சை!

நச்சுத் தன்மையுடைய மீன் கடித்த மீனவர் மருத்துவமனையில் அனுமதி.

News image

சிகிச்சை பெற்று வரும் ராஜ்குமார்.

Updated On :23 டிசம்பர் 2024, 9:30 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நச்சுத் தன்மையுடைய மீன் கடித்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(35) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் ஒரு படகில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர்.

இவர்கள், கோடியக்கரைக்கு அப்பால் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையில் சிக்கிய 'சொறி' என்ற மீன் ராஜ்குமாரைக் கடித்துள்ளது.

மயக்கமடைந்த மீனவருக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆழ்கடல் பகுதியில் காணப்படும் சொறி என்ற ஒரு வகையான கடல் உயிரினம் காணப்படுகிறது. நச்சுத்தன்மை அதிகம் உடைய சொறி மீன்கள் கடித்தாலோ அல்லது முள்ளால் குத்தினாலும் சிலரது உடலுக்கு ஒவ்வாமை அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.