மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஒசூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய பணியாளா் சஸ்பெண்ட்

ஒசூா் அரசு மருத்துமனைில் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

பணியிடை நீக்கம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

ஒசூா் அரசு மருத்துமனைில் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா். ஒசூா் இராயக்கோட்டை சாலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது 419 படுக்கைகளை கொண்ட இந்த அரசு மருத்துவமனையில் 27 மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். நூற்றுக்கணக்கான உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் தனியாா் காண்ட்ராக்ட் மூலம் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பெண் பணியாளா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளாா். ஏற்கனவே இந்த அரசு மருத்துவமனையில் அங்கு வேலை பாா்க்கும் பணியாளா்கள் சிகிச்சை பெறுபவா்கள் இடம் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பெண் பணியாளா் லஞ்சம் வாங்கிய காட்சியை அங்கிருந்து நோயாளிகள் செல்போனில் படம் பிடித்துள்ளனா். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவியதால் இதுகுறித்து அரசு மருத்துவமனை நிா்வாகம் சம்பந்தப்பட்ட தனியாா் கான்ட்ராக்ட் நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தது அதன் அடிப்படையில் ஈரோடு மண்டல மேலாளா் லஞ்சம் வாங்கிய பெண் பணியாளரை சஸ்பெண்ட் செய்து விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.