நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி!

மகாராஷ்டிர மாநிலத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி மீட்கப்பட்டதைப் பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :25 டிசம்பர் 2024, 11:54 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் தாயைப் பிரிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்த சிறுத்தைக் குட்டி வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

அமராவதி மாவட்டத்திலுள்ள செயின்ட் காட்ஜ் பாபா அமராவதி பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள ஏரியில் சிறுத்தைகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று (டிச.24) அதன் தாயுடன் தண்ணீர் குடிக்க வந்த சிறுத்தைக்குட்டி ஒன்று வழித்தவறி பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து சுற்றித் திரிந்துள்ளது.

இந்த தகவலறித்து அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த சிறுத்தைக் குட்டியை பிடித்து பத்திரமாக மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தாயை பிரிந்த அந்த சிறுத்தைக் குட்டி இன்று (டிச.25) மீண்டும் அதன் தாயுடன் பத்திரமாக இணைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.