5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

புலித்தோல் கடத்திய 11 பேர் கைது!

ஒடிசா மாநிலத்தில் புலித்தோல் கடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

News image

மீட்கப்பட்ட புலித்தோல்

Updated On :25 டிசம்பர் 2024, 4:57 pm IST

ஒடிசா மாநிலத்தில் புலித்தோல் கடத்திய 11 பேரை பாலசோர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாலசோர் மாவட்டம் சோரோ நகரில் புலித்தோல் கடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து ஒரு புலித்தோலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலசோர் வனத்துறை அதிகாரி குஷ்வந்த் சிங் கூறுகையில், வனவிலங்குகளின் பாகங்கள் சந்திப்பூர் காட்டுப்பகுதியில் விற்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தாகவும், அதன் அடிப்படையில் பாலசோர் மற்றும் மயூர்பஞ்சு ஆகிய இரு மாவட்டங்களின் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.22) அந்த குழுவினர் நடத்திய சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஒரு புலித்தோலும் கைப்பற்றப்பட்டது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 7 பேரும் சந்திப்பூர் வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின்னர் விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த திங்களன்று (டிச.23) மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 8 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் அந்த புலித்தோல் அவர்களிடம் எப்படி வந்தது? அது ஒடிசாவில் வேட்டையாடப்பட்டதா? என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 11 பேரின் மீதும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.