இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ரஷிய போரில் இந்தியர் பலி...6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!

ரஷிய-உக்ரைன் போரில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டதைப் பற்றி..

ரஷிய-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் ஆறு மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

Published On :

ரஷிய-உக்ரைன் போரில் பலியான உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நபரது உடல் 6 மாதங்கள் கழித்து அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (வயது-41) கடந்த ஜனவரி மாதம் ரஷியவில் சமையல்காரராக பணியாற்ற சென்றார்.

சமையல் பணிக்காக செயிண்ட் பீட்டர்ஸ்பர் நகருக்கு சென்ற அவர் ரஷிய ராணுவத்திற்காக உக்ரைனுடனான போரில் சண்டையிட அனுப்பப்பட்டார்.

கடந்த மே மாதம் 9 ஆம் தேதியன்று போரில் அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தனது மனைவிடம் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் அம்மாதம் 25 ஆம் தேதி வரை அவரது குடுமத்தினருடன் தொடர்பிலிருந்ததாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த டிச.6 ஆம் தேதியன்று ரஷியாவிலுள்ள இந்தியத் தூதரகம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யாதவ் கடந்த ஜூன் மாதம் 17 அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று ரஷியாவிலிருந்து அவரது உடல் விமானம் மூலம் வாரணாசி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு அவரது கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த கன்ஹையா யாதவிற்கு ஒரு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

முன்னதாக, உயிரிழந்த கன்ஹையா யாதவின் குடும்பத்திற்கு ரஷிய அரசு சார்பில் ரூ.30 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.