தெலங்கானாவில் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 446 அரியவகை ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஆந்திராவிலிருந்து ஹைதராபாத்திற்கு அரிய வகை ஆமைகள் விற்பனைக்காகக் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் மல்காஜ்கிரி சிறப்பு காவல்படை ஹைதரபாத்தைச் சேர்ந்த ஷேக் ஜானி(50) என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணையில் கடந்த செவ்வய்கிழமை (டிச.24) நடத்தப்பட்ட சோதனையில் அவரிடமிருந்து 5 நட்சத்திர ஆமைகள் கைப்பற்றப்பட்டது.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையின்போது அந்த நட்சத்திர ஆமைகளை சிராஜ் அஹமது (39) என்பவரிடம் வாங்கியதாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மலாக்பேட்டையிலுள்ள சிராஜின் மீன் பண்ணையிலும் கிடங்கிலும் சோதனை மேற்கொண்டனர். இதில் அவரிடமிருந்து 160 சிவப்பு காது ஆமைகளும், 281 நட்சத்திர ஆமைகளும் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விஜயக்குமார் என்பவருடன் இணைந்து இந்த ஆமைகளை ஆந்திர மாநிலத்திலிருந்து ஹைதரபாத்திற்கு கடத்தி வந்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ள விஜயகுமாரை அம்மாநில காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆமை வேகத்தில் நடைபெறும் திருச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி!

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

