12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்!

மணிப்பூர் மாநிலத்தில் 2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதைப் பற்றி..

கோப்புப்படம்

Published On :

மணிப்பூர் மாநிலத்தில் 2 கிராமங்களின் மீது ஆயுதப்படையினர் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

அம்மாநிலத்தின் கிழக்கு இம்பால் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களின் மீது இன்று (டிச.27) அங்கிருக்கும் மலைகளிலிருந்து இறங்கி வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் துப்பாகியால் சுட்டும் வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிழக்கு இம்பாலின் சன்சாபி எனும் கிராமத்தில் இன்று (டிச.27) காலை 10.45 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டதுடன் வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பணியிலிருந்த பாதுகாப்புப் படையினர் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் அம்மாவட்டத்தின் தம்னாபோக்பி எனும் கிராமத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த இரண்டு தாக்குதல்களினாலும் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இரண்டு தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கிய ஏராளமான பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானோரை பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

கடந்த ஆண்டு (2023) முதல் மணிப்பூரில் இரண்டு சமூதாயக் குழுக்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் மோதல்களினால் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.