குவைத் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஈரானும் இதற்கு பதில் தாக்குதல்களை நடத்துகிறது. இந்த நிலையில், இன்று குவைத் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதல் தொடர்பாக குவைத் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. போர் சமயத்தில் ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவு ஷியா படைகள் குவைத் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர். தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.
போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகம் முழுவதும் பல நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டன. வரும் வாரங்களில் இது மேலும் தீவிரமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரான் தனது அணுசக்தி கொள்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா கூறும் அதேவேளையில், தங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கி முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்குமாறு ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து மாற்றிவருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
Summary
Attacks on Kuwait using drones and missiles, even amidst a ceasefire
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








