முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் பிரபல கன்னட நடிகை இணைந்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் அடுத்து விஜய்யுடன் படம் இயக்குவதாக இருந்தது.
பின்னர் அந்த பேச்சுவார்த்தை கைவிடவே தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.
அயலான் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் சாய் பல்லவியுடன் சேர்ந்து தேசிங்கு பெரியசாமி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவுறும் தருவாயில் இருக்க தற்போது அடுத்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
இந்தப் படத்தில் முதலில் மிருணாள் தாக்குர் நடிப்பதாக தகவல் வெளியான் நிலையில் தற்போது கன்னட நடிகை ருக்மணி வசந்தா ஜோடி சேர்ந்துள்ளார். சமீபத்தில் கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பினை பெற்றது.
கன்னடத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பூஜை புகைப்படங்களை இயக்குநர் முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இசை- அனிருத், சண்டைப் பயிற்சி- திலீப் சுப்புராயன். எடிட்டிங்- ஸ்ரீகர் பிரசாத் என குறிப்பிடப்பட்டுள்ளது.