விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் கருக்கலைப்பு உரிமை!

பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கருக்கலைப்பு மகளிர் உரிமையாக உறுதிப்படுத்தப்படுகிறது...

News image
Updated On :30 ஜனவரி 2024, 7:55 pm IST

பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்திலேயே கருக்கலைப்பை மகளிர் உரிமையாக உறுதிப்படுத்தும் சட்ட முன்வரைவு, பிரான்ஸ் தேசிய அவை (நாடாளுமன்றம்) -யில் செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டதைத்  தொடர்ந்து, இதை அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்வதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உறுதியளித்திருந்தார்.

பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தில் 34-வது பிரிவில் மகளிருக்கான கருக்கலைப்பு உரிமையை இடம் பெறச் செய்யும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று மேக்ரான் அரசு கருதுகிறது.

இத்தகைய திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனிச் சிறப்பு அமர்விலும்  நிறைவேற்றப்பட வேண்டும். இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாகவே தேசிய அவை வாக்களிக்கும்.

பிரான்ஸின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் திருத்தம் எளிதில் நிறைவேற்றப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் முடிவைத் தனித்தவொன்றாகக் கருத முடியாது. இந்தப் போக்கு பரவக்கூடிய நிலையில் இத்தகைய சட்டத் திருத்தம் அவசியம் என்றும் முன்வரைவின் அறிமுகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.