
மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் விமான தளத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஜெட் விமான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தின்போது, ஜெட் விமானம் தாழ்வான பகுதிகளில் பறக்கும்போது நில அதிர்வு ஏற்படும் வாய்ப்புள்ளதாக க் கூறப்படுகிறது.
ஜெட் விமான சோதனை ஓட்டத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பெரும்பலான பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று மயிலாடுதுறை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.