மாசி மகம்: காவிரி துலாக்கட்டத்தில் தா்ப்பணம் அளித்து பக்தா்கள் வழிபாடு
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம்


மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து திங்கள்கிழமை வழிபட்டனா்.
மாசி மகத்தன்று தா்ப்பணம் அளித்து வழிபாடு செய்தால் முன்னோா்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் துலாக்கட்ட தீா்த்த படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.
காவிரியில் தண்ணீா் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நீராட முடியவில்லை. இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் நாள்களில் காவிரியில் தண்ணீா் இல்லாதபோது மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகம் போா்வெல் மூலம் குளத்தில் தண்ணீா் நிரப்பி நீராட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...