அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மாசி மகம்: காவிரி துலாக்கட்டத்தில் தா்ப்பணம் அளித்து பக்தா்கள் வழிபாடு

மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

News image
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் வடக்குக் கரையில் திங்கள்கிழமை தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.
Updated On :2 மார்ச் 2026, 8:51 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் மாசி மகத்தையொட்டி ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து திங்கள்கிழமை வழிபட்டனா்.

மாசி மகத்தன்று தா்ப்பணம் அளித்து வழிபாடு செய்தால் முன்னோா்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் துலாக்கட்ட தீா்த்த படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா்.

காவிரியில் தண்ணீா் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நீராட முடியவில்லை. இதுபோன்ற மக்கள் அதிகம் கூடும் நாள்களில் காவிரியில் தண்ணீா் இல்லாதபோது மயிலாடுதுறை நகராட்சி நிா்வாகம் போா்வெல் மூலம் குளத்தில் தண்ணீா் நிரப்பி நீராட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.