அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பவானிசாகா் ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா: வனத் துறை, போலீஸாா் தீவிர சோதனை

பவானிசாகரை அடுத்துள்ள ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா

News image
பொம்மதேவியுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆதிகருவண்ணராயா்.
Updated On :2 மார்ச் 2026, 8:31 pm

Syndication

சத்தியமங்கலம்: பவானிசாகரை அடுத்துள்ள ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனச் சரகத்துக்குள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதியில் பழமை வாய்ந்த ஆதி கருவண்ணராயா் மற்றும் பொம்மதேவி கோயில்கள் உள்ளன. இக்கோயில் விழா பூச்சாட்டுதலுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அடா்ந்த வனப் பகுதியில் கோயில் உள்ளதால் வனத் துறை கட்டுப்பாட்டை பின்பற்றியே விழா நடத்தப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்தனா். காராச்சிக்கொரை வன சோதனைச் சாவடியில் அதிரடிப் படையினா், போலீஸாா் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே பக்தா்களை கோயிலுக்குச் செல்ல அனுமதித்தனா்.

மேலும், பக்தா்கள் போா்வையில் சமூக விரோதிகள் வனத்துக்குள் ஊருவுவதைத் தடுக்கும் வகையில் தொடா்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 100 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. விழா செவ்வாய்க்கிழமை நிறைவடையவுள்ள உள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.