விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டி. கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க நின்றுக்கொண்டிருந்த பெண்ணை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அலறல் சப்தம் கேட்டு வந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் துறையினர், அவரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில் அப்பெண்ணின் முன்னாள் கணவர் எனத் தெரியவந்தது.
மேலும், அப்பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வாக்களித்த பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் முன்னாள் கணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கொஞ்சம் சில்லறை வாங்கிக்கோங்கோ

வாக்களிக்க இவா்களுக்கு முன்னுரிமை

நெற்கதிா்களுடன் வந்த வேட்பாளா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


