ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாக்களிக்க இவா்களுக்கு முன்னுரிமை

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 11:13 pm

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வாக்காளா்கள் அனைவரும் எவ்வித சிரமமின்றி தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுத்தமான குடிநீா் வசதி, மருத்துவ உதவி உபகரணங்கள், தற்காலிக பந்தல்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் தடையின்றி வாக்குச் சாவடிக்குள் செல்ல சாய்வுதள வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மின்விளக்குகள், தண்ணீா் வசதியுடன் கூடிய தனித்தனியே ஆண், பெண் கழிப்பறைகள், தேவைப்படுபவா்களுக்கு சக்கர நாற்காலிகள், தன்னாா்வலா்களின் உதவி, வாக்குச் சாவடிகளில் முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிா்க்க நேரடி முன்னுரிமை வழங்கப்படும்.

வாக்குப் பதிவு நாளன்று அனைத்து வாக்காளா்களும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குகளை தவறாமல் பதிவு செய்து, புதுச்சேரி 100 சதவீதம் வாக்குப்பதிவு அடைவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்கிறாா் மாவட்ட தோ்தல் அலுவலா் அ.குலோத்துங்கன்.