முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று(ஜூலை 12) தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளன் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக போன்ற சில அரசியல் கட்சிகள் முயற்சி செய்கின்றன.
காவல் துறை விசாரிப்பதற்கு முன்னதாகவே, சிபிஐ விசாரணையை பாஜக கோரியது ஏன்? ஆருத்ரா முறைகேட்டில் பாஜகவினர் சிலருக்கு தொடர்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!

சென்னை திரும்பியதும் நள்ளிரவில் மு.க. ஸ்டாலினுடன் உதயநிதி சந்திப்பு!
திமுக கூட்டணியை பாதுகாத்தது விசிக: தொல்.திருமாவளவன்

மு.க. ஸ்டாலினுடன் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினா் சந்திப்பு
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK




