விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மலிவான அரசியல் செய்யும் பாஜக: காங்கிரஸ் சாடல்

பாஜக மலிவான அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

News image

பவன் கேரா (கோப்புப்படம்)

Updated On :15 ஜூலை 2024, 9:22 am

DIN

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வன்முறையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஊக்குவிப்பதாக கூறிய பாஜகவின் குற்றச்சாட்டுக்கு, மலிவான அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

அமெரிக்காவின் பென்ஸில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயம் அடைந்தார்.

இச்சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனை மறுபதிவு செய்து பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா தன்னுடைய எக்ஸ் தளப்பதிவில், ''ராகுல் கூறுவது பொய்யான வார்த்தைகள். மூன்றாவது முறையாக தோல்வியடைந்த ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிரான வன்முறையை அடிக்கடி ஊக்குவித்து அதனை நியாயப்படுத்தினார். இம்முறை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பலமுறை அதனைச் செய்துள்ளார்.

அப்போது காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த பஞ்சாப் காவல்துறை, பிரதமரின் பாதுகாப்பில் வேண்டுமென்றே சமரசம் செய்ததையும், பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதையும் இந்தியாவால் எப்படி மறக்க முடியும்'' எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் பவன் கேரா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ தலைவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் மலிவான அரசியலில் ஈடுபடக்கூடாது. காங்கிரஸ் கட்சி வலதுசாரி பயங்கரவாதிகள் இடமிருந்து மகாத்மா காந்தியை இழந்தது. இரண்டு பிரதமர்களை பயங்கரவாதிகளால் இழந்தோம்.

பாஜகவின் கண்காணிப்பின் கீழ் இருந்த இடதுசாரி பயங்கராவாதிகளால் எங்களின் முழு சத்தீஸ்கரின் தலைமையையும் இழந்தோம்.

பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த பாஜகவும் நேரு, இந்திராகாந்தி மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது கசப்பான பொய்களைப் பரப்பி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக மக்களை தூண்டிவிடுகிறது. அவர்களுக்கான எஸ்பிஜி பாதுகாப்பை அவர்(மோடி) மர்மமான முறையில் விலக்கிக் கொண்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.