வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது!

மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மேற்கு வங்கத்தை ஒட்டிய வடக்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு நாள்களுக்கு மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
ரயில்வே திட்டப் பணிகளில் காலதாமதம் இல்லை: மத்திய அமைச்சருக்கு தமிழக அரசு பதில்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com