ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் கண்கள் தானம்

கடலூா் மாவட்டம், வடலூா் தனியாா் பள்ளியில் விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் கண் தானமாகப் பெறப்பட்டது.
விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவன் கிஷோாின் கண் தானமாகப் பெறப்பட்டது.
விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவன் கிஷோாின் கண் தானமாகப் பெறப்பட்டது.
Published on
Updated on
1 min read

கடலூர்: கடலூா் மாவட்டம், வடலூா் தனியாா் பள்ளியில் விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் கண் தானமாகப் பெறப்பட்டது.

வடலூா் தருமசாலை பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (35), நெய்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கிஷோா் (15), வடலூா் சந்தைதோப்பு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கிஷோா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாநில, மாவட்ட அளவில் பரிசுகள் பெற்றுள்ளாராம்.

விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவன் கிஷோாின் கண் தானமாகப் பெறப்பட்டது.
மேட்டூா் அணை: வினாடிக்கு 1.12 லட்சம் கன அடி நீர் திறப்பு

கடந்த 24-ஆம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாணவா்களுக்கு விளையாட்டுப் பயிற்சி நடைபெற்றது. ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, அங்கிருந்த கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்ததில், அவா் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக கிஷோா் சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா். இந்த நிலையில், திங்கள்கிழமை கிஷோா் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த மாணவன் கிஷோாின் கண் தானமாகப் பெறப்பட்டது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை

இதனால், மனமுடைந்த அவரது தாய் சிவகாமி, வீட்டில் திங்கள்கிழமை கிருமி நாசினி பொடியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தற்போது அவா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளாா்.

இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மூளைச்சாவு அடைந்த கிஷோரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com