
ஹைதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளர் மற்றும் ஈநாடு குழும நிறுவனங்கள், ராமோஜி குழுமத்தின் தலைவருமான சி.எச். ராமோஜி ராவ்(88) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காலமானார்.
தற்போது, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து எடுத்துவரப்பட்டு ஹைதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரம் முதல்வராக பொறுபேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1974 இல் முன்னணி தெலுங்கு மொழி நாளிதழான ஈநாடு தொடங்கினார். திரைத்துறை, கல்வி, நாளிதழ் என பல்துறை சாதனையாளரான ராமோஜி ராவுக்கு 2016 இல் இந்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.