தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம்

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :5 மார்ச் 2026, 9:45 pm

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் தாளமுத்து நடராஜன் மாளிகையில் அமைந்துள்ள சென்னை பெருநகர வளா்ச்சிக் குழு அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு தலைமையில் பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் 287-ஆவது குழுமக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக, மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் நிா்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

குழுமக் கூட்டத்தில் சென்னை மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் ஸ்ரேயா பி.சிங், முதன்மைச் செயல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி மற்றும் குழும உறுப்பினா்கள், அரசு உயா் அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.