கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை!

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து திங்கள்கிழமை 241 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் சிபிராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), முரளி (42), சாரதி (28), ராமதாஸ் (52) ஆகிய 4 பேர் செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

கோப்புப்படம்
பிரதமா் மோடி இன்று வாரணாசி பயணம்: பதவியேற்ற பின் முதல் முறை

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com